வெள்ளி, 15 ஏப்ரல், 2011

கம்பீர்,காலிஸ் அடியில் காணாமல் போன ராஜஸ்தான் ராயல்ஸ்

| | Leave a Comment
சாவாய் மான்சிங் அரங்கத்தில் இன்று நடந்த கொல்கத்தா உடனான  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

160 ரன்களை துரத்திய கொல்கத்தா அணியின் கம்பீர் ஜோகன் போத்தாவிடம் கேட்ச் கொடுக்க,ஒரு பீல்டர் வலையத்திற்குள் இல்லை என்பதால் அஆட்டம் இழக்காமல் விளையாடிய கம்பீர் ஆட்டத்தின் இறுதி வரை விளையாடி அணிய வெற்றி பாதையில் வழி நடத்தினார்.

முதலில் கம்பீரை விட குறைவான வேகத்தில் விளையாடி வந்த கால்லிஸ் கடைசியில் ரன் மழை பொழிய ஆரம்பித்தார். இவர்கள் இரண்டே பேர் மட்டும் சேர்ந்து மொத்த ரன்களையும் அடித்து விட்டனர். ரன்விந்தர் தானாக முன்வந்து ரன் அவுட் ஆகி முதலில் ராஜஸ்தானுக்கு சந்தோசத்தை வழங்கி பின்னர் அவரே இருந்திருக்கலாம் எனும் அளவிற்கு இவர்களை ஆட்டம் அமைந்து விட்டது.

கம்பீர் 75 ரன்களும் காலிஸ்  80 ரன்களும் எடுத்தனர்.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியில் டிராவிட் நல்ல அடித்தளம் அமித்து கொடுத்தாலும் ரன் விகிதம் குறைவாகவே இருந்தது,யூசுப் பதான் தான் வீசிய ஒரே ஓவரில் இரண்டு பேரை அவுட் ஆக்கி ராஜஸ்தானுக்கு கடுப்பு ஏற்ற, அந்த அணியின் ரன் விகிதம் பெரிதாக மட்டுப்பட்டது. கடைசியில் விளையாடிய டெய்லர், வாட்சன் அதிரடியில் ( இருவரும் தலா இரு சிக்ஸர் அடித்தனர்)அந்த அணி 159 என்னும் ஓரளவிற்கு தடுக்கக்கூடிய ரன்களை போர்டில் வைத்தது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக