சனி, 30 ஜூலை, 2011

தற்செயலாக என் தங்கைக்கு விடுதலை நாள் விழா குறித்த கட்டுரை ஒன்றிற்கு உதவ நேரிட்ட போது எனக்கு தோன்றியவற்றை பதிக்கிறேன். நிச்சயம் பலருக்கும் இது தோன்றி இருக்கலாம்.

சென்னை மாநகரம்,தமிழ்நாட்டின் தலைநகரம் புதிதாக சென்னைக்கு செல்லும் எவரும் காண விழைவது சிலவற்றை தான் அவற்றுள் இவைகள் நிச்சயம் இருக்கும்.
1. உயர் நீதிமன்றம் : தொலைகாட்சி செய்திகளில் மட்டுமே பார்த்து பழகிப் போனது
2.சட்டப்பேரவை : செயின்ட் ஜார்ஜ் கோட்டை
3.சென்னை சென்ட்ரல் : தென்னகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையம்

இவை யாவுமே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவானவை. இவை மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் இதே நிலை தான்.
சரி விடுதலை அடைந்த இவ்வளவு ஆண்டுகளில் இதுவரை எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதை நமது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு உள்ளது?
எங்கள் ஊருக்கு ஆங்கிலேயர் காலத்தில் பாதை ஏதும் அமைக்கப்படவில்லை அவ்வளவு தான்.
இப்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.

எனக்கு என்னவோ என்ன தான் ஆங்கிலேயர்கள் நாட்டை சுரண்டினார்கள் என்றாலும் அதில் ஒரு பாதியையாவது நமக்கு நன்மை செய்து விட்டு தான் போய் இருக்கிறார்கள்.
அரசாங்கத் துறைகள் ஏற்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார்கள்.
சுதந்திரம்,விடுதலை,வெளியே போ என்று முழங்கியோரை அடித்தார்கள், வதைத்தார்கள் என்பது எந்த அளவுக்கு மறுக்க முடியாத உண்மையோ அதே அளவுக்கு சுதந்திரம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு நாட்டை சூறை ஆடி வீட்டில் மறைத்து வைக்கும் பெருச்சாளிகள் நாட்டில் அளவுக்கு அதிகமாய் பெருத்துப் போயிருப்பதும் உண்மை.

இதை களைய வழியே இல்லையே..
வலி ஒன்று தான் வழி..
நம் வலி அவனுக்கு தெரிய வந்தால் தானே அவன் திருந்துவான்..

நாடே கூடி சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று வருடா வருடம் மிட்டாய் கொடுத்து மகிழும் நேரத்தில் கொஞ்சமாவது நான் நிஜமாகவே விடுதலை அடைந்தோமா என்று சிந்திக்க வேண்டும்.

வெள்ளையரிடம் இருந்து வாங்கிய சுதந்திரத்தை நாம் இப்போது நாட்டின் சில அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் அடகு வைத்து இருக்கிறோம்.

அதை மீட்கும் நாள் எப்போது...

விரைந்து சிந்தியுங்கள் இலை என்றால் விடுதலை காலாவதி ஆகி விடப் போகிறது..

உங்கள் கருத்துகளை பதியுங்கள்...

செவ்வாய், 26 ஜூலை, 2011


TANCET Reg.No :


UnOfficial Rank :





Percentile:



Please Note:
  1. You Should  Use your Unofficial Rank only to know your exact percentile in TANCET exam. If you don't know your unofficial rank means Just Visit Here. (If anybody Knows Downloadable PDF address share it on comments )
  2. However it is not necessary to enter your TANCET registration number.
  3. The percentiles calculated here are based on only number of test takers and your unofficial standing. No other data is used here.
  4. If you enter your GCT or AU rank means it will leads to false percentile as many of the test takers didn't applied for the respective counseling 

புதன், 20 ஜூலை, 2011

தமிழ்ப்படம்

விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளத்துடன் அழகு குட்டி பேபி சாரா  நடித்து வெளிவந்திருக்கும் தமிழ்ப்படம் தான் "தெய்வத் திருமகள்".
சில காலம் முன்பு வெளியான தமிழ்ப்படம் என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்ட எந்த வித அத்து மீறல்களும் இல்லாத ஒரு தமிழ் சினிமா.

வெற்றி தந்த வேட்கை

பொதுவாகவே ஒரு வெற்றி பெற்றால் அடுத்து அதை விட பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனிதரில் இருந்து விஜய் வேறுபட்டவர் அல்ல.மதராசப்பட்டினம் தந்த வெற்றி இயக்குனர் விஜய்யை கடுமையாக உழைக்க வைத்திருப்பது படம் முழுக்கத் தெரிகிறது.


இதற்கு சரியான ஆயுதமாக சீயான் விக்ரம் கிடைக்க தமிழ்த் திரை உலகில் மசாலா தடவாத, லாஜிக் ஓட்டைகள் அதிகள் இல்லாத, தேவை அற்ற டூயட் இல்லாத ஒரு நல்ல படத்தை தந்திருப்பதுடன், படம் மிகவும் ட்ரை ஆகாமல் ஆங்காங்கே கதையின் ஊடே நகைச்சுவையை புகுத்தி எவரையும் இருக்கையை விட்டு ஓடி விடாமல் பார்த்துக் கொள்கிறார்.

விக்ரம் - நடிப்பு இலக்கணம்?

படத்தில் பெரிய பலம் குழந்தையாகவே வாழ்ந்த நம்ம சீயான் தான்.
முதல் பாதியில் சீன்கள் கொஞ்சம் நீளமானதாக இருந்தாலும் கதையை ஒட்டிய திரைக்கதை என்பதால் சீட்டை விட்டு யாரும் எழுந்து போனதாக நினைவில்லை.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார்.

கதை 

ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்ட இளைஞன் கிருஷ்ணா. மிட்டாய் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான். அவனை கோடீஸ்வரரின் மகள் காதலித்து மணக்கிறாள்.பிரசவத்தில் பெண் குழந்தை பெற்று விட்டு இறந்து போகிறாள். அக்குழந்தையை கிருஷ்ணா பாசத்தை கொட்டி வளர்க்கிறான்.

ஊட்டி கான்வென்டில் சேர்ந்து படிக்கவும் வைக்கிறான். அப்பள்ளியின் தாளாளர் ஸ்வேதாவுக்கு குழந்தை தனது அக்காள் மகள் என தெரிய வருகிறது. உடனே தந்தையை வர வழைக்கிறாள். அவர் கிருஷ்ணாவிடம் இருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு சென்னைக்கு போய் விடுகிறார்.



குழந்தையை தேடி அலைகிறான் கிருஷ்ணா. அவனது பரிதாபமாக நிலை கண்டு வழக்கறிஞர் அனுராதா உதவ முன் வருகிறாள். குழந்தையை மீட்க கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு போடுகிறார். அவருக்கு எதிராக பணபலமும் ஆள் பலமும் கைகோர்க்கிறது.

குழந்தை விக்ரமுக்கு கிடைத்ததா? என்பது உயிரை கரைக்கும் கிளைமாக்ஸ்.

சாரா - ச்சோ ஸ்வீட்

விக்ரமின் குழந்தையாக நடித்திருக்கிருக்கும் இந்த குழந்தை பார்த்த எவரையும் உடனே பிடித்திட செய்யும் அழகும்,
 கொஞ்ச நேரத்தில் அட! போட வைக்கும் அளவுக்கு நடிப்பும் கொண்டு நம்மை வியக்க வைக்கிறாள்.

அந்த இறுதிக் காட்சியில் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் விக்ரமும் சாராவும் ஜாடையால் பேசுவது,
வார்த்தைகளில் அடங்காத ஒரு உணர்வு நிச்சயம் பிறக்கும் நெஞ்சம் இருக்கும் எவருக்கும்.

மற்றோர்

அனுஷ்கா வழக்கறிஞர் தொழிலை திறம்பட செய்கிறார். இவரிடம் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் எதுவும் இந்தப் படத்தில் கிடைக்கப் பெறாது என்றாலும் நடிப்பிலும் தான் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் இந்த பொம்மாயி.


அமலா பால் குழந்தையின் சித்தியாக வருகிறார். பள்ளியின் தாளாளராக இருக்கும் இவருக்கு குழந்தை பற்றி தெரிந்ததும் அப்பாவிடம் சொல்லி குழந்தையை கிருஷ்ணாவிடம் இருந்து பிரிக்கிறார். அழகாக வந்து போகிறார் அவ்வளவுதான்.

சந்தானம், கதை நகர மறுக்கும் இடங்களில் பயன்பட்டிருக்கிறார். தனது வழக்கமான வசனங்களை ஓரங்கட்டி விட்டு படத்திற்கு ஏற்ப மாற்றி நடித்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

இசையும் ஒளிப்பதிவும் :

 படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் என்றால் அது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு தான்
ஓட்டை தியேட்டரிலும் ஊட்டி குளிரை வரவழைக்கும் இவரது ஒளிப்பதிவு.
அத்தனை காட்சிக்களும் அவ்வளவு அழகு.
ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில் படத்துக்கு படம் முன்னேற்றம் காட்டுகிறார் தந்தை மகள் காட்சிகளில் நிச்சயம் இசை சர்வதேச தரம்.
பாடல்கள் நன்றாக இருந்தாலும் மனதில் அதிக நேரம் நிற்காமல் போக காரணம் தெரியவில்லை.


தவிர்க்க கூடாத திரை ஓவியம்

மொத்தத்தில் நிஜமாகவே தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய முயற்சி தான் இது.
அதிலும் வெற்றி பெறப் போகிற முயற்சி...
 எவ்வளவோ கோடம்பாக்க குப்பைகளை பார்க்கும் நமக்கு இது நிச்சயம் ஒரு மாறுபட்ட தவிர்க்க கூடாத திரைப்படம் தான்..


ரசித்த கம்மென்ட்ஸ் 

கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

- தட்ஸ் தமிழ்

"ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா.....", சப்பாணி சொன்னவுடன் மனசெல்லாம் ஒரு பாரம் வந்து நிரம்பும். அது போல் எதுவும் இல்லை. எனக்கென்னவோ விக்ரம் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணியிருக்கிற மாதிரி தோணுது. மற்றபடி அந்த குட்டிப் பாப்பா ச்சோ... ச்சோ... ச்வீட். :))

# என் மண்டையை உடைப்பதற்கு கையில் கல்லெடுத்த, என் Friends List -ல் இருக்கும் விக்ரம் ரசிகர்கள், தயவு செய்து கல்லைக் கீழே போடும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.. :)) :)) :))

- தமிழ் செல்வி  , முக நூல்

சம காலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் நிலா என பெயரிடப்படும் : தெய்வ திருமகள் எஃபக்ட்

- ஸ்ரீனிவாசன் 

தெய்வத் திருமகள் - பிதாமகனை பிஞ்சு மகள் நடிப்பில் மிஞ்சுகிறாள் பேபி சாரா ராக்ஸ்

-தேவ் 
ஒரு நாட்டின் வளர்ச்சி அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அந்நாட்டின் கல்வியைப் பொறுத்தே அமையும்..
இன்றைக்கு நம்மை விட அமெரிக்காவோ ஜப்பனோ முன்னே இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பொருளாதாரத்தினால் தான் என்பது எனக்கென்னவோ சரியாக படவில்லை. கல்வி கற்பிக்கும் முறைகளில் நமக்கும் அவர்களுக்கும் டயல்-அப்பிற்கும் ப்ராட்பாண்டிற்குமான வித்தியாசம் இருக்கிறது.


அவர்கள் பிள்ளைகள் எதை விரும்புகிறார்களோ எது அவர்களுக்கு வருகிறதோ அதை சொல்லித் தருகிறார்கள். நாம் எது இருக்கிறதோ அதை மாணவன் மீது திணிக்கிறோம்.
சரி இதை எல்லாம் பல நூறு தடவை பல பேர் சொல்லி விட்டார்கள் இனி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இருக்கின்ற கல்வியை சமச்சீர் ஆக்குகிறோம் என்று பாடங்களில் தேவை அற்ற அரசியலாளர்களின் கருத்துகள் புகுந்து கொள்ள அடுத்து வந்த அரசு அதை அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் அன்றி வேறொன்றுமில்லை.

இது நாள் வரையில் பாடப் புத்தகங்களில் இந்த மாதிரி குளறுபடிகள் நடந்ததில்லை. சமச்சீர் கல்வி மிகவும் தேவையானது தான். ஆனால் நாம் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும், நம் வீட்டு விஷேசத்திற்கான அழைப்பிதழில் அடுத்தவர் பெயரை எப்படி போட மாட்டோமோ அதே போல தான் பழைய அரசு குறித்த செய்திகள் பாட நூல்களில் இருப்பதை புதிய அரசு விரும்பவில்லை.

அது எப்படியோ கிடந்து விட்டு போகிறது என்று இவர்களுக்கும் மனம் வரவில்லை, ஆட்சி போய் விட்டதே என்று அவர்களும் அதை விட மாட்டேன் என்கிறார்கள்.
கடைசியில் கஷ்டப்படுவது மாணவர்கள் தான்.

பள்ளி திறந்து ஒன்றரை மாதம் ஆகிறது இன்னும் பாட நூல்கள் கைக்கு வந்த பாடில்லை.
இங்கே இருப்பது மனப்பாட தேர்வு முறை என்பதால் பொதுத் தரவை நோக்கி இருக்கும் மாணவர்கள் நிலை மோசமாகி உள்ளது.

சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க..
எப்படியும் பசங்கள மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கத் தான் வைக்கப் போகிறீர்கள்.. பழசோ புதுசோ
சமச்சீரோ இல்லையோ
ஏதோ ஒரு புத்தகத்தை கொடுங்க

வெள்ளி, 1 ஜூலை, 2011

இணைய உலகில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்த,
மிகப் பெரும்பான்மையானோர் தளத்தின் ஊடே இணைந்து பயன்படுத்தும் தளம் முகநூல்.
அதன் தோற்றம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருக்கின்றன.
மார்க் ஜூக்கர்பெர்க் தன் நண்பரை ஏமாற்றினார், மற்றவரது திறமையை திருடினார் என்று பல கதைகள் இருக்கின்றன அதில் சில கதைகள் நிஜமாகவும் இருக்கலாம்.


ஆனால் முகநூலின் வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இருவர் மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகிள் தாத்தா. அதிலும் குறிப்பாக இணைய உலகையே தன் கைக்குள் அடக்கி ஆள நினைத்த கூகிள் முகநூலின் வருகைக்கு பின் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியாமல் தவித்து வருகிறது.
இன்றைக்கு இணையத்தின் எந்த பக்கத்தை திறந்தாலும் அது ஏதோ ஓர் வகையில் முகநூலுடன் இணைந்து இருக்கிறது.

இப்படியே போனால் மைக்ரோசாப்ட்டை நம்ம காலி பண்ணின மாதிரி முகநூல்காரன் நம்மள காலி பண்ணிடுவானோ என்ற எண்ணம் கூகிள் தாத்தாவிற்கு தோன்றவே அச்சு பிறழாமல் முகநூலை பிரதி எடுத்து அதில் கொஞ்சம் உப்பு பொடி மிளகா சேர்த்து கூகிள் ப்ளஸ் (Google Plus) என்ற பெயரில் தொடங்க போகிறார்கள். கிட்டத்தட்ட நம்ம கோலிவுட்காரர்கள் ஆங்கில படங்களை காப்பி அடிப்பதைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் இதற்கு முன்பே கூகிள் இதனை எதிர்கொள்ள சில முயற்சிகள் எடுத்தது ஆனால் எல்லாமே பிளாப் ஆகி விட்டன. கூகிள் பஸ் (Buzz) , ஓர்குட் (Orkut) என்று கலர் கலராக  ரீல் சுற்றி எதுவும் எடுபடாமல் போகவே இப்போது அட்ட காப்பி அடிக்க முடிவெடுத்து விட்டார்கள்.

சமூக இணையதளங்கள் என்றால் முகநூல் மற்றும் ட்விட்டர் தான் என்ற மனநிலையில் இருந்து மக்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதை கூகிள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. அதனால் தான் முகநூல் வழங்காத சில சேவைகளை அது அறிமுகம் செய்யப் போகிறது.

அதில் முக்கியமான ஒன்றாக தெரிவது முகம் பார்த்து பேசும் வீடியோ சாட்டிங் முறை..
முகம் தெரியாத நபர்களை முகம் பார்த்து பேச வைக்க எடுக்கும் முயற்சி என்றாலும் இதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆடவர் பெண்டிரை தேடியும், பெண்டிர் ஆடவரை தேடியும் நட்பு விருப்பங்களை தெரிவித்து முகம் பார்த்து பேச ஆரம்பித்தால் என்ன ஆவது,
மொத்த நேரமும் கோவிந்தா தான்...

பொதுவாகவே மக்களுக்கு பிறரது சொந்த விஷயங்களை அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் அதிகம் அதனை கருத்தில் கொண்டு தான் முகநூல் இன்னமும் குறிப்பிட்ட சிலருடன் தனது நிலையை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்யவில்லை.
இதனை கூகிள் என்னவோ பெரிய வசதி போல நினைத்து அறிமுகம் செய்கிறார்கள்..
பார்ப்போம் எந்த அளவிற்கு மக்கள் கூகிள் ப்ளஸ்சை விரும்புகிறார்கள் என்று..

என்னமோ போங்க.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டா மட்டும் புலி ஆகிட முடியுமா என்ன?

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு