செவ்வாய், 10 மே, 2011

மும்பை மீண்டும் சொதப்பல் - பஞ்சாப் வெற்றியை பறித்தது

மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒருமுறை பேட்டிங் சொதப்பலால் தோல்வி அடைந்து விட்டது.சச்சினில் தொடங்கி அனைத்து வீரர்களும் பஞ்சாபிடம் விக்கெட்டைக் கொடுத்து பெவிலியனுக்கு வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தெண்டுல்கர் முதலில் பந்து வீச தீர்மானித்தார். ஆனால் அது அவர்களுக்கே போய் வினையாய் முடிந்து விட்டது. அந்த அணி முதல் 15 ஓவர்கள் வரை ஆட்டத்தை தன் கையை விட்டு போகாமல் பார்த்துக் கொண்டது.



பால் வல்தாட்டி அவுட் ஆனதற்கு பின்பு ஜோடி சேர்ந்த கில்க்ரிஸ்ட் - மார்ஷ் இணை பஞ்சாப் அணியை  பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட நூறு ரன்களுக்கு இட்டு சென்றனர். ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி ஐந்து பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். இவர்கள் இணை பிரிந்த பின்பு தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி அணியை வழி நடத்தினார். அவர் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்கு பின்பு நிலைமை மும்பை கைக்கு சென்றது, முனாப் படேல் தனது ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் பந்து வீச்சால் பஞ்சாப் வீரர்களை சீக்கிரமாக அவுட் ஆக்கினார். அவர் இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். மலிங்கா தொடர்ந்து கடைசியில் சிறப்பாக பந்து வீசும் தன் கலையை தொடர்ந்ததால், பஞ்சாப் மிகப்பெரிய ஸ்கோர் எடுக்கும் என்ற விகிதம் மாறி, 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

164 ரன்கள் மும்பையின் பேட்டிங் வரிசைக்கு முன்னர் அவ்வளவு பெரிய ஸ்கோர் ஒன்றும் கிடையாது ஆனால் சச்சின் சீக்கிரத்தில் அவுட் ஆக அந்த அணி மளமளவென்று சரிய தொடங்கியது (மனதின் மூலையில் தொண்ணூறுகளில் இருந்த இந்திய நினைவுக்கு வந்தது ).

கடைசியில் முபையின் எந்த வீரரும் 20 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் போயிற்று. அவ்வணி 87 ரன்களுக்கெல்லாம் வெகு விரைவாகவே தன்னுடைய ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

மும்பை அணி சில நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தான் அணியிடம் இதே  போன்று பேட்டிங் சரிவை கண்டது, இப்போது மீண்டும் அது அரங்கேறி இருப்பதால் மும்பை வெல்ல முடியாத அணி என்ற மாயை சற்று அகன்று விட்டதோ என்று தோன்றுகிறது.

ஆனாலும் சச்சின் விளையாடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் எங்கு போட்டி நடந்தாலும் காண வரும் ரசிகர்களுக்கு இனி வரும் போட்டிகளில் நல்விருந்து படைப்பார் என எண்ணினாலும்,

நான் என் செய்வேன்..?

முன்னதாக நடத்த மற்றொரு போட்டியில் தனது விவேகமான ஆட்டத்தின் மூலம் தன்னுடைய ஐபிஎல் இன்னிங்க்ஸ்-ஐ மீண்டும் வெற்றியுடன் தொடங்கி உள்ளார் தாதா (கங்குலி என்றுதான் சொல்ல வேண்டும் என்றால் அப்படியே வைத்து கொள்ளுங்கள்) 

2 பின்னூட்டங்கள்:

  1. குடந்தை அன்புமணிMay 10, 2011 09:59 PM

    http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. MANO நாஞ்சில் மனோMay 11, 2011 12:14 AM

    ரைட்டு.....

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...