வெள்ளி, 6 மே, 2011

99 நாட் அவுட்.! (5)

ஆசிய அணி ஒன்றிற்கு எதிராக சச்சின் அடித்த முதல் சதம் இது தான். இலங்கையில் சென்று அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெறுவது 90களின் பின் பாதியில் எவ்வளவு கடினமோ அதே மாதிரி முன் பாதியில் எளிதும் கூட என்றாலும் ரணதுங்கா,டி சில்வா போன்றோரின் வருகைக்கு பின்னர் ஓரளவு பலம் பெற்றிருந்த இலங்கை அணியை இந்திய அணியின் சிறப்பான கூட்டு முயற்சியால் இந்த போட்டியில்  வெற்றி பெற முடிந்தது. இது இலங்கை மண்ணில் இந்தியா பெற்ற முதல் வெற்றி ஆகும்.
சதம் #6

ரன்கள் : 104*
எதிரணி : இலங்கை
இடம் : கொழும்பு
நாள் : ஜூலை 31,1993
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : இல்லை

ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினர் தங்கள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக சிரமம் ஏதும் இல்லாத வகையில் 366 ரன்கள் குவித்தனர்.இதில் சச்சினின் பள்ளி காலத்து நண்பன் வினோத் காம்ப்ளி சதமடித்தார்.போட்டியில் இரண்டு மூன்று முடிவுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இலங்கை வீரர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டது,கபில் தேவின் எல்பிடபிள்யூ உட்பட. முதல் இன்னிங்க்ஸ்- ல் சச்சின் ஐந்து பவுண்டரிகள் உடன் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.


அடுத்து களம் கண்ட இலங்கை கும்ப்ளே மற்றும் இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையில் சிக்கி 254 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்ரீநாத் இரண்டு விக்கெட்டுகளும்,கும்ப்ளே மூன்று விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்-ல் முதல் தடவை குறைந்த ரன்கள் அடித்ததற்கு பதிலாக சேர்த்து சச்சின் சதமடித்தார். முன்னதாக கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் ற்கு அடுத்ததாக (200 ரன் பார்ட்னர்ஷிப் ) சிறப்பானதொரு தொடக்கத்தை மனோஜ் பிரபாகரும் -சித்துவும் வழங்கினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 171 ரன்கள் குவித்த போதே இலங்கை ஆட்டத்தை இழந்து விட்டது. என்றாலும் அதற்கு பின்னர் தான் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது சச்சின் தனது வழக்கமான டெஸ்ட் பாணியில் இருந்து சற்று விலகி சீக்கிரகமாகவே ரன் அடிக்க, இலங்கை பந்து வீச்சாளர்கள் எதுவும் செய்ய முடியாமல் திணறினர்.

பேடில் ஸ்வீப் ஷாட், ஸ்கொயர் கட் என பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு அனுப்பிய சச்சின், தனக்கே உரித்தான அந்த ஸ்ட்ரைட் ட்ரைவோடு சேர்த்து மொத்தம் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்தார். சச்சின் சதமடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் இந்தியா டிக்ளேர் செய்தது.

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 359. இலங்கை அணி வெற்றி பெற 472 ரன்கள் தேவை என்ற நிலையில், டிரா செய்ய முனைந்து பொறுமையாக விளையாடியது இலங்கை. ஆனால் மனோஜ் பிரபாகரின் இரட்டை விக்கெட் ஓவருக்கு பின் இலங்கை வீரர்கள் வரிசை கட்ட போட்டி எளிதில் இந்தியா வசம் வந்தது.

இரண்டாவது இங்க்ஸ்-ல் 95 ரன்கள், இரண்டு இன்னிங்க்ஸ் - லும்  3 விக்கெட்டுகள் என சிறப்பாக விளையாடிய மனோஜ் பிரபாகர் ஆட்ட நாயகனானார்.

காணொளி : 

தங்களுக்கு கிடைத்தால் பின்னூட்டப்படுத்தவும்.

இருந்தாலும் சச்சின் முதன் முதலில் தொடக்கக் ஆட்டக்காரராக விளையாடி கோர தாண்டவம் ஆடிய போட்டியின் காணொளி இதோ. அப்போதெல்லாம் சேவாக் மாதிரி எல்லாம் யாரும் விளையாட மாட்டார்கள் ஐம்பது ஓவர்களும் விளையாடி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று விடலாம்.

                            

பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்... 

1 பின்னூட்டங்கள்:

  1. ! ♥ பனித்துளி சங்கர் ♥ !7 மே, 2011 5:02 pm

    அருமயான கண்ணொளி பகிர்ந்தமைக்கு நன்றி . என்னை மிகவும் வெகுவாக கவர்ந்தது தங்களின் பதிவும் .

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...