வெள்ளி, 17 ஜூன், 2011

தமிழ்நாட்டு ராம்தேவும் வெள்ளை காக்காவும்...!

நான் சொல்ல வரும் நபர் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரும் சக்தி என கொஞ்ச நாளைக்கு முன்பு வரை சொல்லிக் கொண்டவர்.
திடீர் திடீர் என்று 'மக்கள்' மீது அன்பு பொங்க ஏதாவது போராட்டங்கள் நடத்துவது இவரின் வாடிக்கை. சில நேரங்களில் அவற்றை தன் கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்குமானால் ஓரளவு நிறைவேற்றி விடுவார்.(பின்னர் அது காணாமல் போவதை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம்)

அப்படித்தான் இந்த முறையும் போராட்டம் நடத்துகிறார்.
அவர் என்னவோ நல்ல விஷயங்களை வலியுறுத்தி தான் போராட்டம் நடத்துகிறார்.(அந்த இடத்தை பார்த்தால் போராட்ட களம் போன்று தெரியவில்லை என்றாலும் தொலைக்காட்சியில் அதனை போராட்டம் என்று தான் அறிவித்து இருக்கிறார்கள் அடியேன் அதை பின்பற்றி தான் இதனை போராட்டம் என்றேன்.) 

தனியார்  பள்ளிகள் தங்கள் இஷ்டத்திற்கு கல்விக் கட்டணம் வசூலிக்கிறார்கள், அதனால் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது 99 ஆண்டுகள் அவற்றை குத்தகைக்கு ஏற்று நடத்த வேண்டும்.
இதெல்லாம் நடக்கிற காரியமா?
அது சரி இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்து விட்டு ஏன் திடீரென இப்படி குதிக்கிறார்..?

என் மண்டைக்கு ஒன்று மட்டும் விளங்கவே மாட்டேன் என்கிறது, பள்ளிகளில் நடக்கும் இந்த கட்டண கொள்ளையை மட்டும் ஆண்டுதோறும் பெயரளவில் எதிர்க்கும் இந்த அரசியல்வாதிகள் ஏன் பொறியியல் கல்லூரிகள் போன்ற மேற்படிப்பு நிலையங்கள் லட்சக் கணக்கில் பணம் பறிப்பதை கணக்கில் கொள்வதே இல்லை என்பது தான் அது.
எப்படி எதிர்ப்பார்கள் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகள் உடையது தானே, அவர்கள் நிர்ணயித்தது தான் கட்டணம் என்று அங்கு மட்டும் பிடுங்கி தின்கிறார்கள். ஆனால் பள்ளிகள் எல்லாம் அவர்களுக்கு பிடிப்பதில்லை ஏனென்றால் அவர்கள் ஆயிரங்களை விட லட்சங்களை பார்த்தே பழகியவர்கள்.

சரி, போராட்டங்களில் கேட்பவற்றை நியாயமாக கேட்க வேண்டாமா?
அரசே ஏற்று பள்ளிகளை நடத்தினால் பள்ளி நிறுவனர்கள் கதி என்ன ஆவது..
அப்படி ஒருவேளை அரசு ஏற்று நடத்தினால் என்ன நடக்கும் பழைய அரசு பள்ளிகளை என்ன செய்வது இழுத்து மூடி விடலாமா?
இரண்டுமே செயல்படட்டும் என்றால் , கல்வித்தரம் இரண்டுக்கும் வேறுபடுமே...

இதற்கெல்லாம் வழி ஏதும் பிறக்காதா என்று எண்ணும் ஏழை தமிழர்களுள் நானும் ஒருவன்
ஏதாவது மாற்றம் என்றால் இவைகள் நடந்தால் நடக்க வாய்ப்புண்டு..

1.அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி எங்கே ஒதுங்குகிறது என்பதை கண்டறிய வேண்டும்

2. முறையாக அந்த பணத்தை பள்ளிகளுக்கு செலவிட வேண்டும்

3. அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் திறமையானவர்களை கொண்டு (லஞ்சம் பெற்றுக் கொண்டு அல்ல )நிரப்பப்பட வேண்டும்

4. அனுபவம் அடிப்படையில் அல்லாமல் திறமையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

5. பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.

6. நிறைய பள்ளிகளை தொடங்கினேன் என்றில்லாமல் கொஞ்சமாய் சிறந்த பள்ளிகளை உருவாக்கிட முனைய வேண்டும்.

7. தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடக் காரணமே ஆங்கிலம் தான், அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆங்கில பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டு Spoken ENglish வகுப்புகள் சேர்க்கப்பட வேண்டும்.

8. அரசு பள்ளி இடங்களை ஆக்கிரமித்து உள்ளோரை அகற்றி விளையாட்டு திடல்களை
அமைக்க வேண்டும்.

9. திருத்தப்பட்ட சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்.

10. எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனம் மாற வேண்டும் அரசு பள்ளிகள் என்றால் தரம் இல்லாதவை என்ற எண்ணம் மறைய வேண்டும்.
தனியார் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள், அனுபவம் மிக்கவர்கள் ஆனால் நாம் தான் அவர்களை பயன் படுத்த தவறுகிறோம்.

எங்கே இதெல்லாம் நடக்க வேண்டு என்று ஏன் மனம் விழைந்தாலும்,
நான் என் செய்வேன்?

தலைப்பு விளக்கம் வேண்டாமென கருதுகிறேன்,
புரியாதவர்கள் மறுமொழி இடவும்..!! 

1 பின்னூட்டங்கள்:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.



    Share

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...