புதன், 11 மே, 2011

11/5 - ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : கே.ஜே.ஏசுதாஸ்

தமிழ் திரை இசை உலகில் கர்நாடக இசையை நவீன காலங்களில் மிகச் செம்மையாக பயன்படுத்தியவர்களுள் கே.ஜே.ஏசுதாஸ் என்றும் முதன்மையாக திகழ்பவர்.
எழுபதுகளை அவர் வயதால் தொட்டாலும் குரலால் அவர் இன்னும் இருபதுகளில் கணீரென ஒலிக்கிறார், இந்த வயதிலும் தன் மகன் குரலுடன் அவர் குரலும் ஒத்துப் போக அவரின் அந்த சங்கீதக் காதலே காரணம்.

அவர் திரை இசையில்,

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா......என்று இழைவதாகட்டும்,
தென்பாண்டித் தமிழே......... என்று குழைவதாகட்டும்,
மலரே குறிஞ்சி மலரே........... என்று அழைப்பதிலாகட்டும்,
வாழ்வே மாயம்................ என்று வலிப்பதாகட்டும்
கண்ணே கலைமானே........... என்று தாலாட்டுவதாகட்டும்,
தண்ணித் தொட்டி தேடி வந்த...... என்று குத்துவதாகட்டும்,
அம்மா என்றழைக்காத........... என்று உருகுவதாகட்டும்

கர்நாடக இசையை எப்படி எங்கு பயன்படுத்தினால் பாடல் சிறக்கும் என்பதில் அவர் போல  நல்லறிவு கொண்டோர் மிகச் சொற்பமே.

அவரின் நூற்றுக்கணக்கான பாடல்களை பின்வரும் இணைய கோப்புறையில் சிரமமின்றி எளிதில் பெறலாம்..

கே.ஜே.ஏசுதாஸ் - 1
கே.ஜே.ஏசுதாஸ்  -2 

பதிவை பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..

1 பின்னூட்டங்கள்:

  1. A.R.ராஜகோபாலன்May 11, 2011 12:25 PM

    நாட்களின்
    நகருதலில்
    தளராத
    மருகாத
    உருகாத குரல் கொண்ட யேசுதாஸை பற்றிய பதிவு அற்புதம்
    இது போல் நிறைய நிறைவாய் தர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...