பிரிந்தால் தானே இணைவதற்கு..?

0
25
முதலில் இந்த பதிவிற்கு திமுக – காங்கிரஸ் மீண்டும் கூட்டு என்று தான் தலைப்பிடல்லாம் என்றிருந்தேன். ஆனால் அப்போது தான் ஒன்று நினைவுக்கு வந்தது. பொதுவாக நாம் பேசும் வசனம் ” மறந்தால் தானே நினைப்பதற்கு “.

அதே போல் பிரிந்தால் தானே மீண்டும் இணைவதற்கு இவர்கள் தான் பிரியவே இல்லை.
ஒரு வழியாக வெகு விரைவாகவே இரு தரப்பிற்கும் வேண்டியது சுமுகமாக பேசி முடிக்க பட்டு விட்டது. காங்கிரசிற்கு அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்து விட்டது. ஆனால் திமுக எதற்காக அடம் பிடித்தார்கள் என்பதும் தெரியவில்லை, அது எப்படி நிறைவேறியது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அதுவாக இருக்குமோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

நம் தலையில் நாமே எழுதி கொள்ள கொடுக்கப்படும் வாய்ப்பு தான் தேர்தல் அதை நாம் எவ்வாறு எழுதுகிறோம் என்றால் பிறரிடம் பணமோ அல்லது ஏதோ பெற்று கொண்டு நமக்கு எதிராக நாமே எழுதி கொள்கிறோம். சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்போது தான் ஐந்து ஆண்டுகட்கு விதி நன்றாக அமையும்.

சரி, சொல்ல வந்ததை சொல்லி முடிக்கிறேன்.
திமுக கூட்டணி உறுதி ஆகி விட்டது அதன் தொகுதி பங்கீடு நிலவரங்கள் வருமாறு :

தி.மு.க., 121
காங்., 63 .
பா.ம.க., 30,
விடுதலைச்சிறுத்தைகள் 10,
கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7,
முஸ்லிம் லீக் 2,
மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1

பகிர்ந்து
முந்தைய செய்திவீர மங்கை பகுதி 3
அடுத்த செய்திவிலை மாந்தர்கள்- பகுதி 1
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.