ஒருவழியாக வாசன் மநகூ இல் சேர்ந்துட்டார்.. யாருக்கு எவ்ளோ தொகுதி?

0
64

தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. சட்டசபைத் தேர்தலில் 26 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. த.மா.கா. 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 25 கட்சிகளிலும் போட்டியிடுகின்றன.

மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனை சந்தித்து கூட்டணி குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆலோசைனயில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரரசன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து வாசன், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற ஆலோசனை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளை கூட்டணி கட்சி தலைவர்கள் இறுதி செய்தனர். அதன்படி தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. த.மா.கா. 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் தலா 25 கட்சிகளிலும் போட்டியிடுகின்றன.

கடந்த மார்ச் 23ம் தேதி மக்கள் நலக்கூட்டணி தேமுதிக கூட்டணி அமைந்த போது 124 தொகுதிகள் போட்டியிடும் எனவும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளதால் தேமுதிகவும், மக்கள் நலக்கூட்டணியும் இணைந்து 26 இடங்களை ஜி.கே. வாசனுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.