சச்சினுக்கும் மச்சம்…!

1
57
என்ன இது மிக எளிதான போட்டியாகி விட்டதே என்று போட்டியின் முதல் ஆறு ஓவர்கள் முடிவில் எல்லோருமே எண்ணி இருப்பார். ஆனால் டச்சு பேட்ஸ்மேன் ரியான் டென் டாஸ்சாடே மிக சிறப்பாக விளையாடியதுடன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து போட்டியை வெறுமனே மும்பையிடம் ஒப்படைக்காமல் கொல்கத்தாவை காப்பாற்றினார்.

முனாப் படேலின் துல்லியமான ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்துகள் மீண்டும் ஒருமுறை அவரை வெற்றி வீரராக மாற்றியது. முதலிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தாவை திணறடித்தார். முதல் விக்கெட்டின் கேட்சை பிடித்தது சச்சின், நிச்சயம் அவர் இன்னும் பத்தாண்டுகள் விளையாடலாம். என்ன ஒரு கேட்ச் அது,
The Ever Youth Sachin took the brilliant catch..

பவர்ப்ளே முடியும் போதெல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்த அந்த அணி   டாஸ்சாடே மற்றும் பதானின் பொறுமையான ஆட்டத்தால் பெறும் சரிவில் இருந்து மீண்டது. எதிர்ப்பார்த்தது போலவே யூசுப் பதான் கொஞ்சம் அவசரப்பட்டு அடிக்க பொல்லார்டு சிறப்பன கேட்ச் மூலம் அவரை வெளியேற்றினார்.

வெற்றிக்கு 148 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணியின் சச்சின், பிளிச்சார்டு முதலிலேயே அதிரடியாய் விளையாடி ரன்  குவித்தனர். எட்டு ஓவர்களில் என்பதை கடந்தனர்.
சச்சின் யூசுப் வீசிய ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகள் தொடர்ந்து அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் பின் பாதியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் பிராங்க்ளின் நிதானமாக விளையாடி வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் பாஜ்ஜி சிக்ஸ் அடித்து மும்பை அணியை அடுத்த போட்டிக்கு இட்டுச் சென்றார்.

விவரம் :  4tamilmedia

மும்பையில் இடம்பெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன் மூலம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) சென்னையில் இடம்பெறும் அரையிறுதி போட்டியில் பெங்களூரை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்டவீரர்கள் கம்பீர், கேலிஸ், கோஸ்வாமி, திவாரி ஆகியோர் 10 க்கும் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். எனினும் அடுத்து களமிறங்கிய பதான் (26), டோஷெட் (70), அல் ஹசான் (26) ஆகியோரின் அதிரடியான இணைப்பாட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை பெற்றது.

பந்துவீச்சில் முனாப் படேல் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்லிசார்ட் 51 ரன்களையும், டெண்டுல்கர் 36 ரன்களையும் பெற்றனர். அவர்கள் முதலாவது விக்கெட்டுக்காக 81 ரன்களை பகிர்ந்துகொண்டனர். எனினும் இருவரும் ஆட்டமிழந்ததும் மும்பை அணி தடுமாறியது. இறுதி இரண்டு ஓவர்களில் 15 ரன்களும், இறுதி ஓவரில் 7 ரன்களும் எடுக்கவிருந்தது.

ஹர்பஜன் சிங் இறுதி ஓவரை எதிர்கொண்டு, இரண்டாவது பந்தில் சிக்ஸர் ஒன்றை அடித்ததன் மூலம், போட்டியை முடித்துவைத்தார். நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியின் போது இறுதி பந்தில் ராயுடு சிக்ஸர் அடித்து போட்டியை முடித்துவைத்தார். இரு தடவையும் கொல்கத்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

வெற்றியை பகிர்ந்து கொள்ள மைதானத்திற்கு விரைந்த சச்சின் கால்களில் Pads உடனேயே இருந்தார். வெற்றியை தேடித்தரும் என்ற அதிஷ்ட நம்பிக்கையால் போட்டி முடிவடையும் வரை இப்படி இருந்திருக்கலாம் என கமெண்டேட்டர்கள் தெரிவித்தனர்.

பரிசளிப்பு விழாவின் போது, கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் கருத்து தெரிவிக்கையில், சிறந்த கேப்டன்களே, அணியை சிறந்த முறையில் வழிநடத்த முடியும். தனது கேப்டன் பதவி அணிக்கு அதிஷ்டமில்லை என கவலைப்பட்டார்.

போட்டி நாயகனாக முனாஃப் படேல் தெரிவானார்.

ஹி..ஹி..

எனக்கு ஒரு பால் போடுங்கப்பா…

 கண்டனம் :

போட்டியின் போது பல நேரங்களில் கம்பீர் வலியால் அவதிப்படுவதை காண முடிந்தது, காயம் எனத் தெரிந்தும் விளையாடுவது ஏன்?
அதுவும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கேப்டன் என்பதையும் மீறி,
பணத்திற்காக நாட்டை புறக்கணிக்கிறார்களா?